Also Watch
Read this
By: Web Team

சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள இந்தியாவின் குரூப் கேப்டன் சுபான்ஷூ சுக்லாவுடன் உரையாடியது அற்புதமாக இருந்ததாக பிரதமர் மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
சுபான்ஷூ சுக்லாவுடன் பேசிய வீடியோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், இந்த வரலாற்று பயணம் விண்வெளி ஆய்வு மாணவர்களின் உத்வேகத்தை கூட்டும் என தெரிவித்துள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியை பார்க்கும் போது உணர்ந்த தருணத்தை சுபான்ஷூ தன்னிடம் விவரித்ததாக மோடி கூறியுள்ளார்.
மேலும், பூமி முழுவதும் எல்லைகள் ஏதுமின்றி ஒன்றாக தெரிகிறது என்றும், நாம் வரைபடத்தில் பார்ப்பதை காட்டிலும் இந்தியா மிகவும் பெரிதாக இருப்பதாக சுபான்ஷூ ஆச்சரியத்துடன் தன்னிடம் தெரிவித்தாக மோடி பதிவிட்டுள்ளார்.