Also Watch
Read this
By: Web Team

வங்கதேச இளைஞர்களின் எழுச்சி போராட்ட தலைவர் ஷெரீஃப் உஸ்மான் ஹாதியின் கொலை குற்றவாளிகள், இந்திய எல்லைக்குள் தப்பிச் செல்வதைத் தடுக்க இந்தியாவின் ஒத்துழைப்பைக் கோரிய வங்கதேசத்தின் இடைக்கால அரசு, அவர்கள் எல்லையைக் கடந்துவிட்டால், உடனடியாகக் கைது செய்து நாடு கடத்த வேண்டும் என்று தெரிவித்தது.முன்னதாக உஸ்மான் ஹாதி மீதான கொலை முயற்சி வழக்கில் ஒத்துழைப்பு கோரி, கடந்த வாரம் வங்கதேசம் இந்தியத் தூதரை அழைத்திருந்தது. இருப்பினும், தாக்குதல் நடத்தியவர்களுக்கு இந்தியாவுடன் தொடர்புள்ளதாக வெளியான குற்றச்சாட்டுகளை வெளியுறவுத்துறை கடுமையாக நிராகரித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved