Also Watch
Read this
By: Web Team

இந்தியாவின் முன்னணி கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை தளமான காயின்டிசிஎக்ஸை ((CoinDCX)) ஹேக்கர்கள் முடக்கியதால், 368 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், வாடிக்கையாளர்களின் சொத்துகள் பாதுகாப்பாக உள்ளதாகவும், இழப்புகள் உரிய முறையில் சரி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், நிறுவனத்தின் கருவூல நிதி மூலதனம் ஆரோக்கியமாக உள்ளதால் இழப்பை ஈடு செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளது. அதோடு, அச்சத்தில் முதலீடுகளை விற்பனை செய்ய வேண்டாம் எனவும், இது குறைந்த விலையால் தேவையற்ற நஷ்டத்தை ஏற்படுத்தும் எனவும், சந்தைகள் இயல்புநிலைக்கு வரும்வரை அமைதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved