Also Watch
Read this
By: Web Team

இந்தியாவின் நீண்ட கால பிரதமராக நீடிக்கும் இரண்டாவது நபர் நரேந்திர மோடி என மாலத்தீவு அதிபர் முகமது முய்சு புகழாரம் சூட்டினார். அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி மாலத்தீவு சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அதிபர் மாளிகை சார்பில் சிறப்பான விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது பிரதமர் மோடியை வாழ்த்தி உரையாற்றிய முய்சு, தொடர்ந்து 4 ஆயிரத்து 78 நாட்கள் பிரதமர் பதவியில் மோடி இருப்பதாக கூறினார். இது அவரது பொது வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்றும், மக்களின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புக்கு ஒரு சான்று என்றும் பெருமை சூட்டினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved