Also Watch
Read this
Posted on: Feb 15, 2026 02:28 PM
By: Manigandan Raja

ஸ்லாப் இடிந்து விழுந்த விவகாரம் :
மும்பையில் கட்டுமானத்தில் உள்ள மெட்ரோ ரயில் பாலத்தின் ஸ்லாப் இடிந்து விழுந்து, ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஒப்பந்ததாரர்களான Buildtech மற்றும் Louis Berger க்கு 6 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
முலுண்ட் எல்.பி.எஸ். சாலையில் வடலாவை தானேயுடன் இணைக்கும் மெட்ரோ ரயில் பாலம் கட்டுமான பணி நடந்து வரும் நிலையில், பாரம் தாங்காத ஸ்லாப், அவ்வழியே சென்ற வாகனங்களின் மீது விழுந்தது. இதில் ஆட்டோ ரிக்ஷா மற்றும் கார் உருக்குலைந்து போனது. கட்டுமான நிறுவனத்தின் நிர்வாகப் பொறியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved