Also Watch
Read this
By: Web Team

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானை நோக்கி பாயும் ஆற்றில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் பல தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானை நோக்கி பாயும் செனாப், பியாஸ் மற்றும் சட்லஜ் ஆறுகளில் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்துள்ளதையடுத்து பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved