Also Watch
Read this
By: Web Team

காசாவில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியதாகவும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கும் பாராட்டு தெரிவித்ததாகவும் பிரதமர் மோடி கூறினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வரலாற்று சிறப்பு மிக்க காசா அமைதி திட்டத்தை வகுத்த டிரம்புக்கு பாராட்டு தெரிவித்தாகவும், வர்த்தக பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள சிறந்த முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், உலகில் பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் தெரிவித்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved