Also Watch
Read this
By: Web Team

கல்வித் துறையை காவிமயமாக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் முயற்சிகளை கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கடுமையாக கண்டித்தார்.
எர்ணாகுளத்தில் நடைபெற்ற தேசிய கல்வி மாநாட்டில் கூறப்பட்ட ஞான சபை திட்டம் குறித்து கவலை தெரிவித்த அவர், தேசிய கல்விக் கொள்கை என்ற போர்வையில் சில அமைப்புகள் தங்கள் நலன்களுக்கு ஏற்ப கல்விக் கொள்கைகளை சிதைக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.
கல்வியின் மீது சித்தாந்தக் கட்டுப்பாட்டை விதிக்கும் அனைத்து அமைப்புகளையும் கேரள மக்கள் எதிர்ப்பார்கள் என அவர் கூறினார்.