Also Watch
Read this
By: Web Team

கச்சத்தீவு குறித்த விவகாரத்தில் தாங்கள் இந்தியாவுக்கு பணிய மாட்டோம் என்பதை வெளிக்காட்டும் வகையில் இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே கச்சத்தீவுக்கு பயணம் செய்தார்.
பாக் நீரிணையில் இருக்கும் இந்த 285 ஏக்கர் பரப்பளவு தீவை இலங்கையிடம் இருந்து இந்தியா திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் கூறி அதை பேசு பொருளாக மாற்றியுள்ளனர்.
இந்த நிலையில் திசநாயகே ஆய்வு என்ற பெயரில் ராணுவ அதிகாரிகளுடன் தனிப்படகில் கச்சத்தீவுக்கு வந்தார்.
வெளிநாட்டின் அழுத்த த்திற்கு அடிபணிந்து கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்க மாட்டோம் எனவும், இலங்கையின் அதிபர் என்ற முறையில் நாட்டின் எல்லைக்கு உட்பட்ட கச்சத் தீவை பாதுகாப்பேன் எனவும் அவர் அனுரா குமார திசநாயகே தெரிவித்துள்ளார்.
பிரதமர் இந்திரா காந்தி மற்றும் ஸ்ரீமாவோ பண்டாரநாயகே இடையே 1974 ல் ஏற்பட்ட ஒப்பந்த த்தின் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது.