Also Watch
Read this
By: Web Team

இந்தியா-ரஷ்யா இடையிலான உறவு கடந்த 70 முதல் 80 ஆண்டுகளில் மிகவும் நிலையானதாக இருந்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் கூறினார். டெல்லியில் பேட்டி ஒன்றில் பேசிய ஜெய்ஷங்கர், புதினின் வருகையால் இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் சிக்கல் ஏற்படும் என்ற கருத்தை ஏற்க முடியாது என்றார். அமெரிக்காவுடன் நடக்கும் பேச்சுவார்த்தைகளில் வர்த்தகம்தான் முக்கிய கவனம் பெறுகிறது என்றும் நியாயமான நிபந்தனைகளின் கீழ் அதை சந்திக்க தயாராக இருப்பதாகவும் ஜெய்ஷங்கர் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved