Also Watch
Read this
By: Web Team

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்ததற்கு ஆர்சிபி அணியே காரணம் என்ற மத்திய அரசு பணியாளர் நிர்வாக தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஆர்சிபி அணி கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது.
லட்சக்கணக்கில் ரசிகர்கள் திரள்வதற்கான எந்த அனுமதியையும் ஆர்சிபி அணி நிர்வாகம் காவல் துறையிடம் இருந்து பெறவில்லை எனவும், சமூக வலைதளங்களில் திடீரென அறிவிப்புகளை வெளியிட்டு லட்சக்கணக்கில் மக்களை திரட்டியதாகவும் கூறிய தீர்ப்பாயம், மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் மூன்று பேரின் பணியிடை நீக்கத்தையும் ரத்து செய்த து.
இந்த நிலையில், தங்கள் மீது குறை கூறிய தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து ஆர்சிபி அணி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved