Also Watch
Read this
By: Web Team

ஏர் இந்தியா விமான விபத்து குறித்து மேற்கத்திய ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடுவதாக, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்து பற்றி மேற்கத்திய ஊடகங்கள் வெளியிட விரும்பும் செய்திகளுக்கு உள்நோக்கம் இருக்கலாம் என்றும், புலனாய்வு அமைப்பின் விசாரணை முடியும் வரை ஊடகங்கள் பொறுமையுடன் இருக்கும்படியும் வேண்டுகோள் விடுத்தார்.
யூகங்களை தவிர்க்கும்படி மேற்கத்திய ஊடகங்களை கேட்டுக்கொண்ட அவர், முழு கருப்பு பெட்டியையும் டிகோட் செய்வதிலும், அந்த தரவை இந்தியாவிலேயே ஆய்வு செய்வதிலும், விமான விபத்து புலனாய்வு பணியகம் சிறப்பாக செயலாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved