Also Watch
Read this
By: Web Team

மத்திய அரசுடன் தொடர்ந்து முரண்பாடாக மாநில அரசு செயல்பட்டால் எந்த பலனும் கிடைக்காது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளரை சந்தித்த நயினார் நாகேந்திரன், குடியரசு துணை தலைவர் வேட்பாளராக இந்தியா கூட்டணி ஒரு தமிழரை நிறுத்தினால், அது தேவையற்ற போட்டியாக இருக்கும் எனக் கூறினார்.
தமிழர் என்ற முறையில் சிபி ராதாகிருஷ்ணனுக்கு தமிழக முதலமைச்சர் முழு ஆதரவு தருவார் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved