Also Watch
Read this
By: Web Team

மேற்கு வங்க அரசு வெளியிட்ட புதி ஓபிசி பட்டியலுக்கு தடை விதித்த கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
ஓபிசி ஏ, ஓபிசி B என இரண்டு விதமாக பட்டியலை வெளியிட்டு அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மேற்கு வங்க அரசு வெளியிட்டது.
140 சாதிகளுக்கான இந்த பட்டியலுக்கு கடந்த மாதம் 17 ஆம் தேதி கொல்கத்தா உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மேற்கு வங்க அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரித்த து.
அப்போது, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது என நீதிபதிகள் தெரிவித்தனர். இப்படி ஒரு தீர்ப்பை எப்படி உயர் நீதிமன்றம் வழங்கியது எனவும் அவர்கள் வியப்பை வெளிப்படுத்தினர்.
இட ஒதுக்கீடு வழங்குவது அரசின் பொறுப்பு என கூறி அவர்கள் விசாரணையை ஒத்தி வைத்தனர்.