news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews கள்ளக் காதலனை மிரட்ட பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்
tv

Also Watch

tv

Read this

கள்ளக் காதலனை மிரட்ட பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்

குண்டூர், ஆந்திரா

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Andhra fire

குண்டூர் மாவட்டம், சேப்ரோலு மண்டலம், சுத்தப்பள்ளியைச் சேர்ந்த மல்லேஷ் (30) தெனாலி சி.எம். காலனியைச் சேர்ந்த துர்கா (28) உடன் திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருந்தான். இருவருக்கும் தனித்தனியாகத் திருமணம் ஆகியிருந்தது.

துர்கா தெனாலி அருகே உள்ள வட்லப்பள்ளியில் தேன் வியாபாரம் செய்கிறாள். மல்லேஷ் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றுகிறான். காற்றுக் காலமாகத் துர்காவின் நடத்தையில் மல்லேஷுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவள் வெளியில் ஆண்களுடன் நெருக்கமாக இருப்பதை அவன் கவனித்தான். சந்தேகம் உண்மை என்று நினைத்து அவளைத் தூரமாக்கினான். துர்கா இதை உணர்ந்து என்ன நடந்தது என்று
கேட்டபோது பதிலைத் தவிர்த்தான்.

சில நாட்களுக்குப் பிறகு மல்லேஷ் அவள் அருகில் செல்வதை முற்றிலும் தவிர்த்துவிட்டான். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான துர்கா மூன்று நாட்களுக்கு முன் மல்லேஷைச்
சந்தித்தாள். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் துர்கா மல்லேஷை ஸ்க்ரூடிரைவரால் காயப்படுத்தினாள். பின்னர் தெனாலி 3 டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தாள்.
போலீசார் மல்லேஷை அழைத்தனர்.

ஆனால் இருவரும் கணவன்-மனைவி இல்லாததால் "நீங்களே பஞ்சாயத்து தீர்த்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லி அனுப்பினர். இதனால் மல்லேஷ் சுத்தப்பள்ளிக்குச் சென்றுவிட்டான்.
மல்லேஷ் தன்னைப் புறக்கணிப்பதாக ஏற்கனவே கோபமடைந்திருந்த துர்கா, எப்படியாவது அவனைத் தன் வலிக்குக் கொண்டு வர வேண்டும் என்று நினைத்தாள். மல்லேஷின் குடும்ப
உறுப்பினர்களைப் பயமுறுத்தினால் அவன் தன் பக்கம் வருவான் என்று எண்ணினாள்.

பின்னர் ஐந்து லிட்டர் பெட்ரோல் கேனை எடுத்துக்கொண்டு சுத்தப்பள்ளியில் உள்ள மல்லேஷின் வீட்டிற்குச் சென்றாள். அப்போது மல்லேஷ் வீட்டில் இல்லை. அவனது மனைவி, மகன், தாய் மட்டுமே இருந்தனர். "உன் மகன் என்னை உதாசீனப்படுத்துகிறான்" என்று கோபத்தை வெளிப்படுத்தினாள்.

அவர்கள் "மல்லேஷ் வந்த பிறகு நீங்கள் இருவரும் பேசிக்கொள்ளுங்கள்" என்று கூறினர். ஆனால் துர்கா வீட்டிலேயே உட்கார்ந்து தன் கூடக் கொண்டு வந்த பெட்ரோலை மல்லேஷின் குடும்ப உறுப்பினர்கள் மீது ஊற்றினாள்.

பின்னர் தன்மீதும் பெட்ரோல் ஊற்றிக்கொண்டாள். வீட்டில் சண்டை நடப்பதை கவனித்த அண்டை வீட்டார்கள் அங்கு வந்தனர். உடனே துர்கா மல்லேஷுக்கு போன் செய்து "நீ எங்கிருந்தாலும் வர வேண்டும், இல்லையென்றால் தீ வைத்துவிடுவேன்" என்று எச்சரித்தாள்.

பின்னர் மல்லேஷின் குடும்பத்தை மிரட்டும் போது லைட்டரை அழுத்தியதால் உடனே தீ பரவியது. இதனால் மல்லேஷின் குடும்ப உறுப்பினர்களுடன் சண்டையைத் தணிக்க வந்த ஆறு
கிராமவாசிகளுக்கும் தீ பற்றிக்கொண்டது.

உள்ளூர்வாசிகள் உடனே தீயை அணைத்து, துர்காவுடன் மல்லேஷின் குடும்ப உறுப்பினர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சிறு காயங்களுடன் இருந்தவர்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர். ஆனால் கடுமையான தீக்காயங்களுடன் இருந்த துர்கா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.

இந்தத் தகவலைப் பெற்ற சேப்ரோலு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்தக் கொடூர சம்பவம் உள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
பரிதாப நிலை பற்றி செய்தி வெளியிட்ட நியூஸ் தமிழ்

பரிதாப நிலை பற்றி செய்தி வெளியிட்ட நியூஸ் தமிழ்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
11 hrs 48 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved