Also Watch
Read this
By: Web Team

கடந்த 3ஆம் தேதி மற்றும் 5ஆம் தேதிக்கு இடையே விமான நிலையங்களில் சிக்கி தவித்த இண்டிகோ பயணிகளுக்கு, பத்தாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என இண்டிகோ விமான நிறுவனம் இன்று அறிவித்தது. இந்த பத்தாயிரம் ரூபாய் வவுச்சராக வழங்கப்படும் எனவும் 12 மாதங்களுக்குள் அதை பயண சீட்டு வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு கட்டணம் திரும்ப கொடுக்கப்படுவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்ற அரசு உத்தரவின் படியும் பயணிகளுக்கு கூடுதலாக இழப்பீடு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved