Also Watch
Read this
By: Web Team

18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை காவல்துறை தெற்கு இணை ஆணையராக இருந்த சிபி சக்கரவர்த்தி, தமிழ்நாடு நியூஸ் பிரின்ஸ் அன்ட் பேப்பர் லிமிடெட் விஜிலென்சின் டி.ஐ.ஜியாகவும்,
சென்னை மேற்கு இணை ஆணையராக இருந்த சேபஸ் கல்யாண் ஐபிஎஸ் சென்னை காவல்துறை தெற்கு இணை ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி ஆக மகேஷ்குமாரும், காவல் தொழில்நுட்ப பிரிவு டிஐஜி ஆக ஜெயந்தியும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஏ.எஸ்.பிக்களாக இருந்த மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எஸ்.பிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved