Also Watch
Read this
By: Web Team

மெக்சிகோவில் உள்ள டோலுகா விமான நிலையத்திற்கு அருகே தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள அகபுல்கோவிலிருந்து 8 பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்களுடன் புறப்பட்ட அந்த விமானம் மத்திய மெக்சிகோவில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் தரையிறங்க முயன்றபோது, வணிக நிறுவனத்தின் உலோகக் கூரையில் மோதி, கரும்புகையுடன் பெரும் தீ விபத்தை ஏற்படுத்தியது. இதில், உயிரிழந்த 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மற்ற 3 பேரின் உடலை தேடும் பணியும் விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved