Also Watch
Read this
By: Web Team

ரஷ்யாவின் காம்சட்கா கடற்கரையில் அதிகாலை 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவான நிலையில் சுனாமியும் தாக்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடல் அலைகள் ஆக்ரோசமாக எழும்பி குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல் நீர் புகுந்த நிலையில் கரையோர மக்கள் ஏற்கனவே அகற்றப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
ரஷ்யாவை தொடர்ந்து ஜப்பானின் Hanasaki துறைமுகத்தில் வழக்கத்தை விட 1 அடி உயரத்திற்கு மேல் அலைகள் எழுந்ததாகவும்,
சுமார் 10 அடிக்கு மேல் அலைகள் எழும்ப வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved