Also Watch
Read this
By: Web Team

ஆன்-லைன் பண விளையாட்டுக்களுக்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் தாக்கலான நிலையில் அதிரடி நடவடிக்கை அமலுக்கு வர உள்ளது.
ஆன்-லைனில் பணத்தை வைத்து விளையாடும் விளையாட்டுக்களுக்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.
விளையாடுபவர்கள், பணம் கட்டும் வகையில் உள்ள ஆன்-லைன் விளையாட்டுக்களை இந்த மசோதா தடை செய்கிறது.
இதுபோன்ற ஆன்-லைன் விளையாட்டுக்களை நடத்தினால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
ஆன்-லைன் சூதாட்ட செயலிகள் தொடர்பான விளம்பரங்களுக்கும் இதன் மூலம் தடை விதிக்கப்படும்.
இதையும் மீறி விளம்பரம் செய்தால் 2 ஆண்டுகள் சிறை, 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று, மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved