Also Watch
Read this
By: Web Team

கேரளாவில் மீண்டும் பெண் ஒருவருக்கு நிஃபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், நோய்தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த 38 வயது பெண், கடந்த 20 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,
சந்தேகத்தின் பேரில் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு நிஃபா வைரஸ் தொற்று இருப்பதை புனே வைராலஜி ஆய்வகம் உறுதி செய்தது.
இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டு, 100க்கும் மேற்பட்டோர் அதிகம் பாதிக்கப்படக் கூடிய ஆபத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அதே சமயம் அந்த பெண்ணின் 3 குழந்தைகளுக்கும் எவ்வித அறிகுறியும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved