Also Watch
Read this
By: Web Team

இழுத்துக் கொண்டே செல்லும் இந்தியா- அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிவு செய்யப்பட்டு, செப்டம்பர் அல்லது அக்டோபரில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
வேளாண் மற்றும் பால் பொருட்கள் மீது அமெரிக்கா தொடா்ந்து வரிச் சலுகையை கோரி வரும் நிலையில், அதனை அளிக்க முடியாத கடினமான சூழலில் இந்தியா இருந்து வருகிறது.
இதனால் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் அமெரிக்கக் குழு இந்தியா வரும் போது மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கும் என சொல்லப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved