Also Watch
Read this
By: Web Team

தமிழகத்தின் மின் தேவையில், ஆறில் ஒரு பங்கு மின்சாரத்தை மட்டுமே உற்பத்தி செய்யும் அளவுக்கு, மின்சார வாரியத்தை திமுக ஆட்சியாளர்கள் சிதைத்து வைத்திருப்பதாக, பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெறும் 16% மின்சாரம் மட்டுமே மின்சார வாரியத்தால் சொந்தமாக உற்பத்தி செய்யப்படுவதாகவும், மின்சார கொள்முதல் மூலம் கிடைக்கும் தொகையை இழக்க விரும்பாததால் தான், புதிய அனல் மின் திட்டங்களை செயல்படுத்த திமுக அரசு தயாராக இல்லை என குற்றம்சாட்டினார். மேலும், தாங்கள் கொள்ளையடிப்பதற்காக, பொது மக்கள் தலையில் மின்சாரக் கட்டண உயர்வு என்ற பெரும் சுமையை சுமத்தும் மோசடியில் திமுக ஈடுபடுவதாகவும், அன்புமணி சாடினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved