Also Watch
Read this
நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என்றும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பாதை...
இதுதொடர்பாக, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறி இருப்பதாவது;
தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று ஜூலை 30ஆம் தேதி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
தமிழகத்தின் பிற பகுதிகளில்...

6 மாவட்டங்களில்...
தமிழ்நாட்டில் தேனி, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved