Also Watch
Read this
முதல்வர் விஜய் உரை
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலுரையில் பேசியதாவது;
திரைப்படங்கள் மூலம் ஊழல் எதிர்ப்பு
நான் நடித்த திரைப்படங்கள் மூலம் ஊழல் எதிர்ப்பை பதிவு செய்தோம். பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை தவிர மற்ற அனைத்தையும் ஏற்பதாக அறிவித்தோம். 2024ஆம் ஆண்டு கட்சி தொடங்கிய உடனேயே சிஏஏவை எதிர்த்து அறிக்கை வெளியிட்டோம்
"நடிகன் என நையாண்டி செய்தால்..."
மதுரை மாநாட்டில் அரசியல் வழிகாட்டியாக அறிஞர் அண்ணா, எம்ஜிஆரை ஏற்றதாக அறிவித்தோம். கட்சி ஆரம்பித்தபின் வீட்டிற்குள் செல்வோர் மத்தியில், நம் மக்கள் வீட்டிற்குள் சென்ற பின் தான் கட்சி ஆரம்பித்தோம். நடிகன் எனக்கூறி நக்கல் நையாண்டி செய்தாலும் எனக்கு கவலையில்லை.
"தனித்து நின்று 35% வாக்குகள்..."
மக்கள் நம்மை தெளிவாக புரிந்து கொண்டதால் 2026 தேர்தலில் தனியாக நின்று 35% வாக்கு பெற்றோம். கரூர் உயிரிழப்பு கொடூர சம்பவம் எப்போதும் நெஞ்சத்தை விட்டு அகலாது. அண்ணாவின் சாமானியர் ஆட்சி போல், விஜய் ஆட்சியில் மிக மிக சாமானியர்கள் ஆட்சியில் உள்ளனர். இளைஞர்களால் என்ன செய்ய முடியும் என்று கேட்டோருக்கு பதிலாக தான் நமது ஆட்சி.
இவ்வாறு விஜய் பேசினார்.