Also Watch
Read this
திமுக கடும் அமளி
டாஸ்மாக்கில் பார்ட்டி பண்ட் என முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசியதை கண்டித்து பேரவையில் திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். திமுகவினருக்கு பதில் தெரிவிக்க தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டமாக எழுந்ததால் பேரவையில் அமளி ஏற்பட்டது. முதலமைச்சர் பேசி முடித்த பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதி அளிப்பேன் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார். தவெகவினரை நோக்கி, திமுகவினர் ஒருமையில் அழைப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் குற்றம் சாட்டினார்.

“அவர்கள் கூறியதை பின்பற்ற வேண்டும்”
டாஸ்மாக் ஊழல் குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜயின் பேச்சை கண்டித்து பேரவையில் திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது, கடந்த ஆட்சியில் பேசி முடித்த பின் குறிப்பு எடுத்து பேசலாம் என அவர்கள் கூறியதை இப்போது பின்பற்ற வேண்டும் என்று அவை முன்னவர் செங்கோட்டையன் சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம்
டாஸ்மாக் ஊழல் குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜயின் பேச்சை கண்டித்து பேரவையில் திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது, பேரவையில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என தவெக எம்எல்ஏக்கள் எடுத்துக்காட்டாய் நடக்கின்றனர்; எதிர்க்கட்சி தலைவரும் தங்கள் உறுப்பினர்களிடம் அதை வலியுறுத்த வேண்டும் - என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

திமுகவினர் வெளிநடப்பு
முதலமைச்சர் ஜோசப் விஜயின் பேச்சை கண்டித்து பேரவையில் இருந்து திமுகவினர் வெளி நடப்பு செய்தனர்.