Also Watch
Read this
By: Web Team

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் 5 முறை sorry என மன்னிப்பு கேட்டத்து கவனத்தை ஈர்த்தது.
இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில், தவெக அரசால் மின்வெட்டு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்மட்சி தலைவர் உதயநிதி ஸாலின் அடுக்கி கொண்டே சென்றார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் விஜய் பதில் உரை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொணார்.
இதை தொடர்ந்து ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்து பேசினார். அப்போது, சட்டமன்றத்தில் மரபு மீறி 2 முறை தேசிய கீதம் பாடியதாக எதிர்கட்சியினர் வைத்த விமர்சனத்துக்கு பதிலளித்தார். 2021ம் ஆண்டு இதே சட்டமன்றத்தில் மறைந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் புகைப்படம் வெளியீட்டு விழாவில் தேசிய கீதத்துக்கு பிறகுதான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது என்ற முறை கொண்டு வந்ததாகவும் அதை மறந்து எதிர்கட்சியினர் குற்றம்சாட்டுவதாக கூறினார். மேலும் அன்றே இருமுறை தேசிய கீதம் பாட்டப்பட்டது. அப்போது ஜனாதிபதி விழாவில் பங்கேற்றிருந்தார் என்றார்.
இந்த விளக்கத்தை அளித்த விஜய், முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்பதற்கு பதிலாக கருணாநிதி என கூறினார். பின்னர் சுதாரித்து கொண்ட அவர், கருணாநிதி என பெயர் குறிப்பிட்டதால் தொடர்ந்து 5 முறை சட்டமன்ற கூட்டத்த்லி sorry, sorry என மன்னிபு கேட்டார்.