Also Watch
Read this
முதல்வர் விஜய் உரை
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலுரையில் பேசியதாவது;
"சாதனையை பட்டியலிட்ட முதல்வர்"
சிங்கப்பெண் சிறப்பு படை, குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு, மின்துறையில் மாற்றங்கள் மற்றும் பல குவாரிகள் சீல் வைக்கப்பட்டுள்ளது, டாஸ்மாக் மூடல் என தனது ஆட்சியின் செயல்பாட்டை பட்டியலிட்டு முதல்வர் உரை.
தொல்லையான நிலைமையை உருவாக்கி வைத்தவர்கள் நமக்கு ஆட்சி செய்ய தெரியாது என கூறுகின்றனர்.
ஊழல் செய்ய தெரியாது
எங்களுக்கு மக்கள் பணி செய்ய தெரிந்த அளவுக்கு ஊழல் செய்ய தெரியாது. பதவி உயர்வு, பணியிட மாற்றத்துக்கு பணம் வாங்க தெரியாது, புதிய பணியிடங்களை விற்க தெரியாது.
"கோவில் பணத்தை கொள்ளையடிக்க தெரியாது"
கோவில் நிர்வாக சீர்கேட்டை தடுக்க தெரியும், கோவில் பணத்தை கொள்ளையடிக்க தெரியாது, தங்கத்தை உருக்கி விற்க தெரியாது.
நம் வீட்டு பெண்களை மதிக்க தெரிந்த எங்களுக்கு ஓசி பஸ், ரூ.1,000 பணம் என பேச தெரியாது. எதிர்க்கட்சி என்பதால் எங்கள் ஆட்சியின் மீது 1000 பழி போடலாம், மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை உள்ளது.
இவ்வாறு விஜய் பேசினார்.