Also Watch
Read this
By: Web Team

மகாராஷ்டிரா சட்டமன்றக் கூட்டத்தின்போது செல்போனில் ரம்மி விளையாடிய அமைச்சர் மாணிக்ராவ் கோகடேவிடம் இருந்து விவசாயத்துறை பறிக்கப்பட்டு, விளையாட்டுத்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் சட்டப் பேரவை கூட்டத்தொடரின்போது தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் பிரிவை சேர்ந்த அமைச்சர் மாணிக்ராவ் கோகடே செல்போனில் ரம்மி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
சட்டப்பேரவை விவாதங்களை பார்க்க யூடியூபை திறக்க முற்பட்டபோது, ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட ரம்மி விளையாட்டு செயலி திறந்துவிட்டதாக அவர் விளக்கம் அளித்த நிலையில், தற்போது இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.