Also Watch
Read this
பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 46 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 57 காசுகளும் அதிகரித்தது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 107 ரூபாய் 77 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 100 ரூபாயை நெருங்கி 99 ரூபாய் 55 காசுகளுக்கும் விற்பனை ஆனது.
10 நாட்களில் ரூ.7.50 காசுகள் அதிகரிப்பு
10 நாட்களில் நான்காவது முறையாக விலை அதிகரித்து, பெட்ரோல் டீசல் விற்பனை ஆனது. கடந்த 15ஆம் தேதிக்குப் பிறகு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 7 ரூபாய் 50 காசுகளும், ஒரு லிட்டர் டீசல் விலை 7 ரூபாய் 60 காசுகளும் உயர்ந்தன.

விலை உயர்வால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
எரிபொருட்களின் தொடர் விலை அதிகரிப்பால் வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்கெனவே அதிகரித்துள்ள நிலையில் மேலும் விலைவாசி உயரக்கூடும் என்பதால் உழைக்கும் வர்க்கத்தினர் கலக்கம் அடைந்து உள்ளனர்.
2 வாரங்களுக்குள்...
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 2 வாரங்களுக்குள் 4ஆவது முறையாக உயர்த்தப்பட்டு உள்ளது. மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றம், ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள கப்பல் போக்குவரத்து முடக்கம் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 105 டாலரைக் கடந்து, வர்த்தகமாகி வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள இறக்குமதி செலவினங்களைச் சமாளிக்க, எண்ணெய் நிறுவனங்கள் கடந்த மே 15ஆம் தேதி முதல் விலையேற்றத்தைத் தொடங்கின.

எரிபொருள் விலை உச்சம்
இதனைத் தொடர்ந்து மே 19, மே 23ஆம் தேதிகளில் அடுத்தடுத்து விலையை உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள், தற்போது 14 நாட்களுக்குள் நான்காவது முறையாக பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்தின. இந்தத் தொடர் மாற்றங்களால் எரிபொருள் விலை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

சென்னையில்
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.46 உயர்வு
ரூ.107.77க்கு விற்பனை

டீசல் விலை
லிட்டருக்கு ரூ.2.57 உயர்ந்து
ரூ.99.55-க்கு விற்பனை
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved