Also Watch
Read this
By: Web Team

79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி திரௌபதி முர்மு, நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
தனது உரையில் ஜனாதிபதி கூறியதாவது:
இந்தியாவின் வலுவான பொருளாதார முன்னேற்றம், ஜனநாயக மதிப்பு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பை கொண்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் 6.5 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்துடன், கட்டுப்படுத்தப்பட்ட பண வீக்கம், அதிகரித்து வரும் ஏற்றுமதி மற்றும் மில்லியன் கணக்கானவர்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்த மேம்பட்ட நிர்வாகம் ஆகியவற்றால், வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது.
வருமானம் மற்றும் பிராந்திய ஏற்றத்தாழ்வு குறைந்து வருகிறது; ஒரு காலத்தில் பின்தங்கிய மாநிலங்கள், இப்போது வலுவான பொருளாதார செயல் திறனைக் கொண்டுள்ளது.
பிரிவினையின் கொடூர நினைவு தினத்தை நினைவுகூர்ந்து, நாடு பிரிந்தபோது பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, வரலாற்றின் பாடங்களை நினைவில் கொள்ள வேண்டும்.
உலகளாவிய வயது வந்தோர் வாக்குரிமை, குடிமக்கள் தங்கள் விதியை வடிவமைக்க எவ்வாறு அதிகாரம் அளித்தது என்பதை உணரவேண்டும்.
அரசியலமைப்பின் முக்கிய தூண்களான நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவை மனித கண்ணியத்தை இதயத்தில் கொண்டு தேசத்தை வழி நடத்த வேண்டும்.
ஒற்றுமை, மீள்தன்மை மற்றும் பகிரப்பட்ட தேசிய உணர்வின் பெருமைமிக்க நினைவூட்டலே சுதந்திர தினம்; வாழ்த்துக்கள்.
இவ்வாறு ஜனாதிபதி தமது உரையில் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved