Also Watch
Read this
By: Web Team

பெங்களூருவில் ஒரு கோடியே 41 லட்சம் ரூபாய் சாலை வரி செலுத்தவில்லை எனக் கூறி, சுமார் 7.5 கோடி மதிப்பிலான ஃபெராரி சொகுசு காரை போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட காரை பெங்களூருவில் பயன்படுத்தி வந்த நிலையில், கர்நாடகாவில் சாலை வரி செலுத்தப்படாமல் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து பெங்களூரு லால்பாக் அருகே காரை பறிமுதல் செய்த அதிகாரிகள், உடனடியாக வரி பாக்கியை செலுத்துமாறு உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கினர்.
காரின் உரிமையாளரும், ஒரு கோடியே 41 லட்ச ரூபாய் வரி பாக்கியை செலுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved