Also Watch
Read this
By: Web Team

அகரம் அறக்கட்டளை மூலமாக அமைதியான புரட்சியை ஏற்படுத்தி வருவதாக பாராட்டு தெரிவித்த கமல்ஹாசனுக்கு, நடிகர்கள் சூர்யாவும், கார்த்தியும் நன்றி தெரிவித்துள்ளனர்.
கமலின் வாழ்த்து செய்தியை குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் நன்றி கூறியுள்ள சூர்யா,
கமலின் வாழ்த்து செய்தியில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் தனது குடும்பத்திற்கும், அகரம் அறக்கட்டளைக்கும் அர்த்தம் சேர்ப்பதாக தெரிவித்துள்ளார்.
எல்லைகளை கடந்து சென்று புதிய சாதனைகளை படைப்பதற்கும், உயரிய நோக்கத்துடன் வழி நடத்துவதற்கும் கமல்ஹாசன் எப்போதுமே தூண்டுதலாக இருப்பதாக நடிகர் கார்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved