Also Watch
Read this
Posted on: Feb 13, 2025 01:54 PM
By: Srini Vasan

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவருக்கு கர்ப்பத்தை கலைக்க உரிமை உண்டு என்று அலகாபாத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குழந்தையை பெற்றெடுக்க வேண்டுமா? அல்லது கர்ப்பத்தை கலைக்க வேண்டுமா? என முடிவு செய்யும் உரிமை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved