Also Watch
Read this
By: Web Team

கர்நாடகாவில் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் ஆட்சியாளர்களுக்கு சமூகநீதி ஞானம் எப்போது பிறக்கும் என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் யாருக்கும் சமூகநீதி கிடைத்துவிடக் கூடாது என்ற வன்மமும் சாதிவாரி மக்கள்தொகை விவரங்கள் வெளியானால் தமிழக மக்களை ஏமாற்றி அடக்கி ஆள் முடியாது என்ற அச்சமும்தான் முதலமைச்சரை தடுக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
கணக்கெடுப்பு நடத்துவதற்கான கட்டமைப்புகளும், வசதிகளும் கர்நாடகத்தை விட தமிழகத்தில் அதிகமாக உள்ளதாக தெரிவித்த அவர் உடனடியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved