Also Watch
Read this
By: Web Team

திமுகவின் வரலாற்று திரிபுக்கு ஒரு அளவே இல்லையா? என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
காமராஜர் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், காமராஜர் மறையும் தருவாயிலான நிகழ்வுகள் வரலாற்று குறிப்புகளாக இருக்கும் போது கருணாநிதியின் கையைப் பிடித்து புகழ்ந்தார் என்று சொல்வது எவ்வளவு பெரிய பச்சை பொய் என்று குறிப்பிட்டுள்ளார்.
காமராஜர் பற்றி ஸ்டாலினும், திமுகவும் பேசுவதெல்லாம் நகைமுரண் என தெரிவித்தார். காமராஜர் புகழை மழுங்கடிக்கத் துடிக்கும் அற்ப அரசியலை திமுக செய்வதாக குற்றம்சாட்டிய அவர், ஒருபோதும் திமுகவினரால் காமராஜரின் புகழைத் துளியும் குறைத்துவிட முடியாது என்று குறிப்பிட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved