Also Watch
Read this
By: Web Team

எஸ்சி, எஸ்டி மாணவர் விடுதிகளை சமூக நீதி விடுதி என்று பெயர் வைத்து முதலைமைச்சர் கேலிக்கூத்தை அரங்கேற்றியுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எஸ்சி, எஸ்டி மாணவர் விடுதிகள் மோசமான நிலையில் உள்ளது என்றார். ஒரு நாளாவது விடுதிகளை முதலமைச்சர் நேரில் சென்று பார்த்துள்ளாரா என கேள்வி எழுப்பினார்.
ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கைக்காக ஒவ்வொரு வீடாக சென்று கதவை தட்டும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved