Also Watch
Read this
By: Web Team

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த தவறியதன் மூலம் பெரும் தவறை செய்து விட்டதாக ராகுல் காந்தி காலம் கடந்து உணர்ந்ததை, மு.க.ஸ்டாலின் தனது பதவி காலத்திலேயே உணர்வாரா என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டியின் ஓபிசி மாநாட்டில் ராகுல் காந்தி பேசியதை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ள அன்புமணி, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக தமிழக அரசுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் விவாதம் நடத்தி புரிய வைக்க தயாராக இருப்பதாகவும், விரைவில் விவாதம் நடத்தப்பட வேண்டும் எனவும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved