Also Watch
Read this
Posted on: May 24, 2025 12:15 PM
By: Srini Vasan

கிராமங்களில் சொத்து வரியை உயர்த்தியுள்ள தமிழக அரசிற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராமங்களில் உள்ள ஓலைக் குடிசைகள், ஓட்டு வீடுகள் உள்ளிட்டவற்றுக்கு பல மடங்கு சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும், திமுக அரசு நான்கு ஆண்டுகளாக மக்களின் வயிற்றில் அடித்து வருவதாகவும் குற்றச்சாட்டினார்.
ஏற்கனவே பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, பஞ்சாயத்து பகுதிகளுக்கு உயர்த்தப்பட்ட வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved