Also Watch
Read this
By: Web Team

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு கருப்பசாமி கோவிலில் ஆடி அமாவாசையை ஒட்டி பால்குட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலை பகுதியில் இருந்து செண்டை மேளம் முழங்கிட புறப்பட்ட பால்குட ஊர்வலத்தில் சுமார் 10 ஆயிரத்து 8 பக்தர்கள் பால்குடம் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து, கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved