Also Watch
Read this
By: Web Team

குமரி மாவட்டம் அதங்கோடு கறச்சிவிளை ஸ்ரீகண்ட சாஸ்தா கோவிலில், 14 ஆண்டுகளுக்கு பிறகு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கடந்த 7ஆம் தேதி முதல் கணபதி ஹோமம், தேவ பிரசன்ன பரிகார பூஜைகள், கலச அபிஷேகத்துடன் உச்ச பூஜைகள் என சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், ஞாயிறன்று புனித நீர் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு பூஜையும், தீபாராதனையும், பின்னர் கும்பாபிஷேக வாழ்த்தரங்கமும் நடைபெற்றது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved