Also Watch
Read this
By: Web Team

இந்தியா- இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4-ஆவது டி-20 போட்டி, இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 3-ஆவது டி-20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றிபெற்று 3-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved