Also Watch
Read this
By: Web Team

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிக்கு தங்கள் அணியை அனுப்புவது கடினம் என பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் தெரிவித்தது.
வீரர்களின் பாதுகாப்பு குறித்த அச்சமே இதற்கு காரணம் என்று அது கூறியுள்ளது. தங்கள் வீரர்கள் போட்டியில் முழு கவனம் செலுத்தும் அளவிற்கு பாதுகாப்பு இருக்கும் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது என்பதை தெரிவிக்குமாறு இந்தியாவிடம் கோரியுள்ளதாக பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் தாரிக் புக்தி தெரிவித்தார்.
இந்த தொடருக்காக இந்தியாவிற்கு பயணிக்க பாகிஸ்தான் வீரர்கள் ஆர்வம் காட்டவில்லை எனவும் அவர் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved