Also Watch
Read this
By: Web Team

இந்தியா, இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையேயான 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் தொடரில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
லண்டனில் நடைபெற்ற 3 வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து 319 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 305 ரன்கள் குவித்து போராடி தோல்வி அடைந்தது.
இதன் மூலம் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் இந்தியா தரப்பில் அபாரமாக விளையாடிய ஹர்மன்பிரீத் கவுர் 102 ரன்கள் குவித்து அசத்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved