Also Watch
Read this
Posted on: Dec 27, 2025 11:14 AM
By: Manigandan Raja

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியின் இந்திய மகளிர் அணி வென்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ரன்கள் சோ்க்க, இந்தியா 13.2 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து வென்றது. இந்திய அணியின் பௌலிங்கில் ரேணுகா சிங் 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்த, பேட்டிங்கில் ஷஃபாலி வா்மா அரை சதம் கடந்து வெற்றிக்கு வழிவகுத்தாா்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved