Also Watch
Read this
By: Manigandan Raja

ரேணுகா சிங் தாகூர் விலகல் :
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங்குக்கு பதிலாக காஷ்வீ கௌதம் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
6-ம் தேதி போட்டி நடைபெறும் நிலையில், பயிற்சியின்போது ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாகூர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, அவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் காஷ்வீ கௌதம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இவர், உள்நாட்டு போட்டிகளிலும், மகளிர் ஐபிஎல் தொடரிலும் தனது அபாரமான பந்துவீச்சால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved