Also Watch
Read this
By: Web Team

துபாயில் நடைபெற்று வரும் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 18 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் வங்கதேசத்தை பாகிஸ்தான் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved