Also Watch
Read this
By: Manigandan Raja

டி-20 கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அவகாசம் தர வேண்டும் :
இந்திய அணி சமீபகாலமாக டி-20 கிரிக்கெட் போட்டிகளில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், ஸ்ரேயாஸ் ஐயருக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டி.வில்லியர்ஸ் கருத்து தெரிவித்தார்.
ஐபிஎல் தொடரில் அவரது அமைதியான அணுகுமுறையுடன் கூடிய தலைமைப் பண்பு மிகவும் பிடித்திருந்ததாகவும், 2 அல்லது 3 போட்டிகளை வைத்து அவரை மதிப்பிடுவது நியாயமற்றது எனவும் டி.வில்லியர்ஸ் கூறினார்.
4-வது டி20 போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி :

இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியிலும் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, தொடரையும் 3-க்கு 0 என கைப்பற்றியது. நேற்று இரவு நடைபெற்ற 4-வது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 158 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 80 ரன்கள் குவித்தார்.
தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. பில் சால்ட் - ஹாரி ப்ரூக் ஜோடி அபாரமாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. நிறைவில், இங்கிலாந்து அணி 13.5 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 159 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.