Also Watch
Read this
By: Web Team

ஜெர்மனி பயணத்தில் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு 7,020 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர், இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதாக பெருமிதம் தெரிவித்தார்.
ஜெர்மனியின் துல்லியத்தையும் தமிழ்நாட்டின் ஆற்றலையும் ஒருங்கிணைத்தால் புதிய வளர்ச்சி பாதையை உருவாக்க முடியும் என்பதால், வரலாற்று பெருமைகள் கொண்ட தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள் என முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர், முதலீடு செய்ய வருவோருக்கு உகந்த சூழல் உறுதி செய்யப்படும் என உறுதி அளித்தார்.
இந்தியாவின் ஜெர்மனியாக தமிழ்நாடு விளங்குவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.