Also Watch
Read this
By: Web Team

ரஷ்யாவில் பள்ளிக்குள் 10 வயது மாணவனை கத்தியால் குத்தி கொலை செய்த 15-வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். மாஸ்கோ அருகே உள்ள பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அச்சுறுத்திய சிறுவனிடம் காவலாளி விசாரிக்க சென்ற நிலையில், திடீரென கையில் வைத்திருந்த கத்தியால் அவரை பலமுறை குத்தினான். இதில் அவர் படுகாயமடைந்த நிலையில், இந்த அதிர்ச்சி சம்பவம் சிறுவனின் சட்டையில் இருந்த கேமராவில் பதிவானது.இதற்கு முன்னதாக 10 வயது மாணவனை சிறுவன் கொலை செய்தது தெரிய வந்த நிலையில், தாக்குதலுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved